மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி வெல்லும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி வெல்லும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி வெல்லும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி வெல்லும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் 10 மணி நிலவரப்படி 5.77 சதவீத வாக்குகளும், ஹரியாணாவில் 8.92 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது, மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி 225 இடங்களை வெல்லும் என்பதில் உறுதியாக உள்ளேன். இங்கு எதிர்க்கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். மோடி, பட்னாவிஸ் பக்கம் மக்கள் உள்ளனர். அதேபோல், ஹரியாணாவிலும் நாங்கள் 75க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்வோம் என்றார். 

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியில், பாஜக 164 இடங்களிலும், சிவசேனை 124 இடங்களிலும் போட்டியிடுகின்றன. எதிர்க்கட்சிக் கூட்டணியில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முறையே 147, 121 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. 

இதேபோல், 90 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில், ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் கட்சியிலிருந்து பிரிந்து உருவான ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது. மத்திய அரசியலும், பஞ்சாபிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோமணி அகாலிதளம், ஹரியாணாவில் இந்திய தேசிய லோக் தளத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com