ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், சிவகுமாருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதனடிப்படையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிவகுமார் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், அமலாக்கத் துறையினரால் சிவகுமார் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கறுப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவகுமாரை, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா திகார் சிறையில் புதன்கிழமை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனியும் உடனிருந்தார்.