ஆந்தை திருடர்களை கைது செய்த போலீஸ்: சூனியக்காரருக்கு வலைவீச்சு

சூனியக்காரர் ஒருவர் தீபாவளியன்று ஆந்தைகளை பலியிட விரும்பியுள்ளார்.
ஆந்தை திருடர்களை கைது செய்த போலீஸ்: சூனியக்காரருக்கு வலைவீச்சு

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தின் இந்திராபுரம் பகுதியில் ஆந்தைகளைப் பிடித்து வைத்திருந்தவர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

சூனியக்காரர் ஒருவர் தீபாவளியன்று ஆந்தைகளை பலியிட விரும்பியுள்ளார். இதற்காக பறவைகளைக் கடத்தும் இருவரை தொடர்புகொண்டதாகத் தெரிகிறது.

இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து அரிய வகை 5 ஆந்தைகளைும் மீட்கப்பட்டது.. பின்னர் அவற்றை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விரைவில் ஆந்தைகளை பலியிட திட்டமிட்டிருந்த சூனியக்காரரையும் கைது செய்வோம் என காசியாபாத் எஸ்.பி. மணீஷ் மிஷ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com