போலீஸ் அணிவகுப்பின் போது துப்பாக்கி வெடிக்காமல் போன விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்லியா எனுமிடத்தில் அக்டோபர் 22-ஆம் தேதி சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
சுமார் 100 போலீஸார் பங்கேற்ற இந்த அணிவகுப்பு ஒத்திகையின் போது கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் கண்ணீர் புகைக்குண்டு சுடுவது தொடர்பாக காண்பிக்கப்பட்டது.
ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த கண்ணீர் புகைக்குண்டு துப்பாக்கியில் இருந்து வெளியேறவில்லை. இந்த விடியோப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. துப்பாக்கியில் ஈரப்பதம் அதிகமிருந்தது தான் இதற்கு காரணம் என்று போலீஸார் பின்பு விளக்கமளித்தனர்.