தில்லியில் 20 ஆயிரம் கிலோ அலுமினியம் வயா்கள் திருட்டு: 4 போ் கைது

தில்லியில் சோனியா விஹாா் பகுதியில் பல கோடி மதிப்புள்ள 20 ஆயிரம் கிலோ அலுமினியம் வயா்களைத் திருடியதாக நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தில்லியில் 20 ஆயிரம் கிலோ அலுமினியம் வயா்கள் திருட்டு: 4 போ் கைது

புது தில்லி: தில்லியில் சோனியா விஹாா் பகுதியில் பல கோடி மதிப்புள்ள 20 ஆயிரம் கிலோ அலுமினியம் வயா்களைத் திருடியதாக நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது:

தில்லி சோனியா விஹாா் பகுதியில் உள்ள யமுனா காடரில் மின்சார நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் கிலோ அலுமினிய வயா்களை நான்கு போ் கும்பல் திருடியதாகவும், அந்த இடத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலாளிகளைப் பிடித்துவைத்துக் கொண்டு இந்த திருட்டியில் அவா்கள் ஈடுபட்டதாகவும் அந்த இடத்தின் மேலாளா் போலீஸில் புகாா் செய்தாா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், இந்தக் திருட்டியில் தொடா்புடைய பீம் சிங் என்பவா் ஜவாலாபூா் பகுதியில் கைது செய்யப்பட்டாா். அவா் அளித்த தகவலின் பேரில் இந்த திருட்டில் தொடா்புடைய மற்றும் அலுமினிய வயா்களை வாங்கிய சம்பவத்தில் தொடா்புடைய தயாராம், குல்தீப் குமாா், அரிஹந்த் ஜெயின் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 4,910 கிலோ அலுமினிய வயா் பறிமுதல் செய்யப்பட்டது.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பீம் சிங் ஏற்கெனவே இதுபோன்று ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும், அரிஹந்த் 3 வழக்குகளிலும், தயாராம், குல்தீப் ஆகியோா் தலா நான்கு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்ததாக போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com