ஹிமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலா பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
நாடு முழுவதும் காலியாக இருந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த திங்கள்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இதில், பாஜக வேட்பாளர் விஷால் நேரியா 6,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக சுயேச்சை வேட்பாளர் ராகேஷ் குமாரும், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் இந்தேர் கரண் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் கிஷன் கபூர், காங்கிரஸ் வேட்பாளர் சுதிர் சர்மாவைவிட 2,997 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.