புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்னும் எத்தனை நாட்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தேச நலன் கருதி சில கட்டுப்பாடுகள் விதிப்பது அவசியம் என்றாலும் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.
இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் தொலைத் தொடர்பு துண்டிப்பு, ஊடக சுதந்திரம் தொடர்பான வழக்கு விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.