இரு மாநிலத் தேர்தல்: காணொலி காட்சி மூலம் வாரணாசி கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து காணொலி காட்சி மூலம் வாரணாசி கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் நடத்தினார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

புது தில்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து காணொலி காட்சி மூலம் வாரணாசி கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் நடத்தினார்.

கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வியாழனன்று காலை வெளியாகின. இதில் மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனை கூட்டணி பெருவெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஹரியாணாவில் இழுபறி நிலை நீடிக்கிறது.

முடிவுகள் வெளியானதையடுத்து பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் ஆலோசனை நடத்தினர். ஹரியாணாவில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியானது.

அதன்பின்னர் காணொலி காட்சி மூலம் வாரணாசி கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் நடத்தினார். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் உரையாடினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com