குடியரசுத் தலைவர், நிதியமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பெண் பாதுகாப்பு அதிகாரி
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடும்போது பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது.
தேசிய வர்த்தகக் கூட்டமைப்பு விருது வழங்கும் விழா தில்லியல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அங்கிருந்த பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து மேடையில் இருந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் இறங்கி வந்து அந்த பெண் பாதுகாப்பு அதிகாரியிடம் நலம் விசாரித்தனர்.