தில்லி அரசுப் பேருந்தில் பெண்களுக்கு இன்று முதல் இலவசப் பயணம்

தில்லி அரசுப் பேருந்தில் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.
தில்லி அரசுப் பேருந்தில் பெண்களுக்கு இன்று முதல் இலவசப் பயணம்

தில்லி அரசுப் பேருந்தில் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.

கடந்த சுதந்திர தின உரையின் போது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லி அரசுப் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை அறிவித்தார். இதற்கு தில்லி அமைச்சரவை ஆகஸ்ட் 29-ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து அக்டோபர் 29-ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்மூலம் நொய்டா, என்சிஆர் மற்றும் விமானநிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பயணிக்கும் அரசுப் பேருந்துகளில் முதல்கட்டமாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதேசமயம் தில்லி அரசு பெண் அதிகாரிகளின் பயணத் தொகை சலுகை நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிங்க் நிறத்தில் வழங்கப்படும் இந்த டிக்கெட்டுக்கான நிலுவைத் தொகையை அரசிடம் இருந்து போக்குவரத்துக் கழகம் பின்னர் பெற்றுக்கொள்ளும். தில்லி அரசுப் பேருந்தின் மூலம் நாளொன்றுக்கு 45 லட்சம் பேர் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, தில்லி அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வரும் செவ்வாய்கிழமை (அக்.29) முதல் பேருந்துகளில் புதிதாக 13,000 பாதுகாவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com