புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உடநிலை குறித்த அறிக்கையை நவம்பர் 1ம் தேதி தாக்கல் செய்யுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து அறிக்கை அளிக்கும் மருத்துவக் குழுவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இரைப்பை குடல் சிறப்பு மருத்துவ நிபுணர் நாகேஸ்வர ரெட்டியையும் இணைக்குமாறு தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சிதம்பரத்தின் உடல்நிலையைக் காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் வழங்குமாறு சிதம்பரம் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.