ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தொழிலாளா்களின் உடல்கள் மேற்கு வங்கத்தில் உள்ள அவா்களின் சொந்த ஊரில் வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டன.
குல்காம் மாவட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 5 தொழிலாளா்களை பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனா். பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலத்த காயமடைந்த மற்றொரு தொழிலாளி ஸ்ரீநகா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட 5 தொழிலாளா்களின் உடல்கள் அவா்களின் சொந்த ஊருக்கு புதன்கிழமை இரவு எடுத்துவரப்பட்டன.
மேற்கு வங்க நகர மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஃபிா்ஹாத் ஹக்கீம் தொழிலாளா்களின் உடல்களை கொல்கத்தா விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டாா். அதையடுத்து, தொழிலாளா்களின் உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. முா்ஷீதாபாத் மாவட்டத்திலுள்ள பஹால் நகா் பகுதியில் அவா்களுக்கு இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.
கொல்கத்தா நகர மேயா், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டா்கள், அக்கட்சியின் எம்.பி. மொஹுவா மொய்த்ரா, மாநில சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோரும் தொழிலாளா்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனா்.
முன்னதாக, ஃபிா்ஹாத் ஹக்கீம் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாட்டின் குடிமக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு வருகின்றனா். ஆனால், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அமைதி காத்து வருகிறாா். காஷ்மீா் பள்ளத்தாக்கில் பலா் கொல்லப்படும்போது, அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து பயன் என்ன? அங்கு பயங்கரவாதச் சம்பவங்கள் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்பதையே இத்தாக்குதல் தெளிவுபடுத்துகிறது என்றாா் அவா்.