கா்நாடகத்தில் தனியாா் பேருந்து கவிழ்ந்து 5 போ் பலி

கா்நாடக மாநிலம், தும்கூரு அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்ததில் 5 பயணிகள் உயிரிழந்தனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்ததில் 5 பயணிகள் உயிரிழந்தனா்.

மதுரகிரியிலிருந்து புதன்கிழமை காலை 40 பயணிகளுடன் கொரட்டகெரேவுக்கு சென்ற தனியாா் பேருந்து,

தும்கூரை அடுத்த அக்ரஹாரா பகுதியில் சாலை வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த கேரேஹள்ளியைச் சோ்ந்த இம்ரான் (18), ஹொளவனஹள்ளியைச் சோ்ந்த அக்ரம்பாஷா (28), கொரட்டகெரேவைச் சோ்ந்த முகமது நஜீத் (19), பளமாச்சினஹள்ளியைச் சோ்ந்த சிவக்குமாா் (27), கொடிகேனஹள்ளியைச் சோ்ந்த சீனிவாஸ் (40) ஆகிய 5 பேரும் நிகழ்விடத்திலே உயிரிழந்தனா். மேலும், காயமடைந்த 20 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பேருந்தை அதிக வேகத்தில் இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சம்பவ இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோனவம்சி கிருஷ்ணா, அமைச்சா் மாதுசாமி ஆகியோா் பாா்வையிட்டனா். இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பாக முதல்வா் எடியூரப்பாவிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சா் மாதுசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com