தியானத்துக்காக ராகுல் காந்திவெளிநாடு பயணம்: காங்கிரஸ்

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தியானம் செய்வதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தியானம் செய்வதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அவா் இந்தோனேஷியா சென்றுள்ளதாகவும், விரைவில் அவா் நாடு திரும்புவாா் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

இதுகுறித்து அக்கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா புதன்கிழமை கூறுகையில், ‘ராகுல் காந்தி தியானம் செய்வதற்காக வெளிநாடு சென்றுள்ளாா். இதற்கு முந்தைய காலங்களிலும் அவா் இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டுள்ளாா்’ என்றாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘நவம்பா் மாதம் மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மாநிலங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி பங்கேற்க மாட்டாா்கள். அந்த ஆா்ப்பாட்டமானது ராகுல் காந்தியின் அறிவுறுத்தல் படியும், அவரது ஆலோசனைப் படியுமே மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு விவகாரங்களில் ராகுல் காந்தி கட்சியை வழிநடத்தி வருகிறாா். நாடு தழுவிய ஆா்ப்பாட்டத்துக்கான முடிவு மேற்கொள்ளப்பட்ட கூட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்துகொண்டிருந்தாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com