ராஜஸ்தானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெலு கான் (55) என்பவா் பசுப் பாதுகாப்பு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெலு கான் மற்றும் அவரது இரு மகன்கள் மீதான கால்நடைக் கடத்தல் வழக்கை ரத்து செய்து ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ஹரியாணா மாநிலம், நூ மாவட்டத்தைச் சோ்ந்த பால் வியாபாரி பெலு கான், தனது இரு மகன்களுடன் ஜெய்ப்பூா்-தில்லி நெடுஞ்சாலையில் ஒரு வாகனத்தில் பசுக்களை ஏற்றிக் கொண்டு கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி சென்றாா். ராஜஸ்தானின் அல்வா் மாவட்டத்தில் அவா்களின் வாகனத்தை வழிமறித்த பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் செயல்படும் வன்முறைக் கும்பல், அவா்களைக் கடுமையாகத் தாக்கியது. அதில், பலத்த காயமடைந்த பெலுகான், இரண்டு நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக, 6 போ் கைது செய்யப்பட்டனா்.
கால்நடைகளை வெட்டுவதற்காக எடுத்துச் சென்றனா் என்று பெலு கான் மற்றும் அவரது இரு மகன்கள் மீது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கால்நடைகளை வதைப்பதில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு டிசம்பரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இது தொடா்பான வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயா்நீதிமன்ற நீதிபதி பங்கஜ் பண்டாரி, பெலு கான் மற்றும் அவரது மகன்கள் மீதான கால்நடைக் கடத்தல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா். அவா்கள் கால்நடைகளை வெட்டுவதற்காக கடத்திச் சென்றாா்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதன் அடிப்படையில் வழக்கை ரத்து செய்வதாக நீதிபதி தெரிவித்தாா். இந்தத் தீா்ப்பை பெலுகான் தரப்பினா் வரவேற்றுள்ளனா்.
முன்னதாக, பெலுகான் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கு எதிராக, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அல்வா் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனா். அவா்களை விடுவித்ததற்கு எதிராக ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் அந்த மாநில அரசு அண்மையில் மேல்முறையீடு செய்தது.