இந்தியப் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது: வெங்கய்ய நாயுடு

இந்தியப் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியப் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். 

தில்லியில் இன்று நடைபெற்ற தேசிய மாநாடு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, 

"இந்தியப் பொருளாதார அடிப்படி வலிமையாக உள்ளது. நாம் ஒரு சில சீர்த்திருத்தங்களை மேற்கொண்டதால் அது நிலையாக உள்ளது. உலக அளவில் மந்த நிலை நிலவுவதால், இது தற்காலிகமானதுதான். அதனால், யாரும் வருத்தமடைய வேண்டாம். இந்தியா பொருளாதார வளர்ச்சியில் நகர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. வரும் நாட்களில் அதன் வேகம் அதிகரித்து, இலக்கை அடையும்" என்றார்.

இந்தியாவை வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி பொருளாதார சக்தியாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com