மும்பைக்கு ரெட் அலர்ட்: 24 மணிநேரமாக தொடர் கனமழை

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 
மும்பைக்கு ரெட் அலர்ட்: 24 மணிநேரமாக தொடர் கனமழை

கடந்த 24 மணிநேரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பையின் தாணே உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 8:30 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி வரை 24 மணிநேரத்தில் மட்டும் 131.4 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

இதனால், சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் பாதுகாப்புடம் வீடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com