ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக பெண் எம்எல்ஏ அல்கா லம்பா அறிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் சாந்தினி சவுக் தொகுதி பெண் எம்எல்ஏ அல்கா லம்பா. இவர், தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அல்கா லம்பா காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் சந்தித்தார்.
இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிருப்தி எம்எல்ஏ அல்கா லம்பா இன்று தெரிவித்துள்ளார்.