மஹாராஷ்டிரத்தில் 90 நாய்கள் திடீர் மரணம்

மஹாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் 90 நாய்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

மஹாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் 90 நாய்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாவட்டத்தில் அமைந்துள்ள கிர்தா-சவல்தப்ரா சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அங்கு வனத்துறை சோதனை நடத்தியது.

அப்போது சுமார் 90 நாய்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அப்பகுதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாய்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்ததன் முடிவில், அவை பல நாட்கள் உணவின்றியும், அடித்து-துன்புறுத்தி கொலை செய்யப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com