மேற்குவங்கத்தில் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக இடதுசாரிகள் போராட்டம்

மேற்குவங்கத்தில் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக இடதுசாரிகள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். 
மேற்குவங்கத்தில் போராட்டம் நடத்திய இடதுசாரி அமைப்பை தடுக்கும் போலீஸார்
மேற்குவங்கத்தில் போராட்டம் நடத்திய இடதுசாரி அமைப்பை தடுக்கும் போலீஸார்

மேற்குவங்கத்தில் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக இடதுசாரிகள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாகக் கூறி அம்மாநில தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தினர்.

சிங்கூர் எனுமிடத்தில் இருந்து துவங்கிய இந்தப் பேரணி 40 கிலோ மீட்டர்களைக் கடந்து தலைநகர் கொல்கத்தாவுக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தது. இதில் இடதுசாரியைச் சேர்ந்த மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.

இந்நிலையில், காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை கலைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com