புது தில்லி: இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. எனினும் இது கன மழையாக இருக்கவில்லை.
கொலாபாவில் 6.2 மி.மீ. மழையும், சான்டா க்ரூஸ் பகுதியில் 41.3 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், மும்பையின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதேப்போல, தில்லி, குருக்ராம், ஃபரிதாபாத், நொய்டா, காஸியாபாத் ஆகிய பகுதிகளிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்த மழை கன மழையாக இருக்காது என்றும், நகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை என்றும் சொல்லியிருப்பது சற்று ஆறுதல் அளித்துள்ளது.