சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருமான ராஜீவ் குமார், சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகவில்லை. 
கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் | கோப்புப் படம்
கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் | கோப்புப் படம்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்காக, மேற்கு வங்க சிஐடி கூடுதல் தலைமை இயக்குநரும், கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருமான ராஜீவ் குமார், சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகவில்லை. அவரது செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, அவர் கொல்கத்தாவிலிருந்து வேறெங்கும் சென்றுவிடாமல் இருப்பதற்கான நடவடிக்கையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் 2 மணிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com