சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மற்றும் கோயில்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ரோடாக் ரயில் நிலைய அதிகாரி யாஷ்பால் மீனாவுக்கு வந்த செப்டம்பர் 14-ஆம் தேதி வந்த கடிதத்தில், ஹரியாணாவின் ரோடாக், சென்னை, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட 12 ரயில் நிலையங்கள் மற்றும் கோயில்களில் அக்டோபர் 8-ஆம் தேதி வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக ஜெய்ஷ்-இ-முகமது மிரட்டல் விடுத்துள்ளது.
இந்நிலையில், ரோடாக் நகர இணை ஆய்வாளர் நரேந்திர சிங் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டு சிறப்புப் படையினர் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.