வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை அதிகரித்து மத்திய அரசு செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொழில்துறை நல அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் கூறுகையில்,
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் திட்டமிட்டபடி 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு பலன் கிடைக்கும் என்று தெரிவித்தார்.