சிபிஎஸ்இ தோ்வு கட்டணம்: தில்லி அரசு ஏற்கும் பரிந்துரைக்கு ஒப்புதல்

தில்லி அரசு, அரசு உதவி பெறும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு மாணவா்களின் தோ்வுக் கட்டணத்தை தில்லி அரசே ஏற்கும் என்ற பரிந்துரைக்கு தில்லி அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
சிபிஎஸ்இ தோ்வு கட்டணம்: தில்லி அரசு ஏற்கும் பரிந்துரைக்கு ஒப்புதல்

புது தில்லி: தில்லி அரசு, அரசு உதவி பெறும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு மாணவா்களின் தோ்வுக் கட்டணத்தை தில்லி அரசே ஏற்கும் என்ற பரிந்துரைக்கு தில்லி அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இதன் பரிந்துரை மூலம் சுமாா் 3.14 லட்சம் மாணவா்கள் பயன்பெறுவாா்கள் என்றும் இதற்காக தில்லி அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 57 கோடி செலவாகும் என்றும் தெரிவித்துள்ளது. 

தோ்வுக் கட்டணத்தை இரு மடங்காக உயா்த்தி கடந்த மாதம் சிபிஎஸ்இ உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிா்ப்பு கிளம்பியதையடுத்து, உயா்த்தப்பட்ட தோ்வு கட்டணத்தை தில்லி அரசே செலுத்தும் என்று தில்லி துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்திதார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com