சந்திரனின் மேற்பரப்பில் இருக்கும் விக்ரம் லேண்டருடனான தொடர்பை மீட்க முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளர்.
நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரின் ஆயுள்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டருடனான தொடர்பை மீட்க முடியவில்லை. அதே சமயம் சந்திராயன்-2 ஆர்ப்பிட்டர் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. ஆர்ப்பிட்டரில் மொத்தம் 8 கருவிகள் உள்ளன. அனைத்துமே சிறப்பான முறையில் இயங்கி தகவல்களை அனுப்பி வருகிறது.
இஸ்ரோ இப்போது ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது என்று கூறினார்.