தில்லியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமை (செப்.21) மதியம் நடைபெறவுள்ளது.
அப்போது, மஹாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.