உள்நாட்டு நிறுவனங்களுக்கான பெரு நிறுவன வரியை (கார்பரேட் வரி) மத்திய அரசு 25.17 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது சுமார் 10 சதவீத வரிக் குறைப்பாகும். இந்த வரிக் குறைப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது.
கோவா தலைநகர் பனாஜியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 37-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அப்போது, 2024-ஆம் ஆண்டு வரை வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பாதுகாப்புத்துறை பொருள்களுக்கு ஜிஎஸ்டி மற்றம் ஐ-ஜிஎஸ்டி ஆகிய வரிகளில் இருந்து விலக்கு அளித்து நடவடிக்கை எடுத்தார்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறைச் செயலர் அஜய் குமார் கூறுகையில், பாதுகாப்புத்துறை பொருள்கள் மீதான வரி விலக்கு நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இது நாட்டின் பாதுகாப்புத்துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று தெரிவித்தார்.