உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாநில விவசாயிகள் ஏராளமானோர் தில்லிக்கு சனிக்கிழமை பேரணி மேற்கொண்டுள்ளனர்.
விவசாயக்கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத்தொகை, இலவச மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நொய்டா 69-ஆவது செக்டரில் தொடங்கியுள்ள இந்தப் பேரணி தில்லி கிசான் கட் வரை நடைபெறவுள்ளது.
முன்னதாக, பாரதிய கிசான் சங்கதன் மற்றும் விவசாய அமைச்சரவை உள்ளிட்டவற்றுடன் நொய்டாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செப்.11-ஆம் தேதி மின்சாரக் கட்டணம் உயர்வைத் தொடர்ந்து இந்தப் பேரணி தொடங்கப்பட்டுள்ளது.