குஜராத்தில் மேலும் 2 தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல் அறிவிப்பு

குஜராத் மாநிலத்தில் மேலும் 2 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குஜராத்தில் மேலும் 2 தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல் அறிவிப்பு

குஜராத் மாநிலத்தில் மேலும் 2 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "குஜராத்தில் ரதன்பூர், பாயத் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும், பிகார் மாநிலம், சமஸ்திபூர் மக்களவைத் தொகுதிக்கும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலும் அதே நாளில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
நாடு முழுவதும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 66-ஆக அதிகரித்துள்ளது.
அருணாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிஸா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
அஸ்ஸாம் (4 தொகுதிகள்), பிகார் (5), குஜராத் (6), ஹிமாசலப் பிரதேசம் (2), கேரளம் (5), பஞ்சாப் (4), சிக்கிம் (3), ராஜஸ்தான் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் தலா 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com