புது தில்லி: அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிமினல் வழக்குகளில் பிரிவு 102ன் கீழ் வழக்குப் பதிவு செய்யும் போது சந்தேகத்தின் பேரில் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை என்று உச்ச நீதமின்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
காவல்துறையினர் தாங்களாக எந்த ஒரு அசையும், அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யக் கூடாது, கொலை, கொள்ளை வழக்கு விசாரணையின் போது போலீசார் சொத்தை பறிமுதல் செய்ய அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.