ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் ஊடுருவியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இன்று காலை முதல் நடந்து வந்த துப்பாக்கிச் சண்டையில், பிணையக் கைதியாக பயங்கரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்ட முதியவரும் பத்திரமாக மீட்கப்பட்டார்.
படோடே நகரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை காவல்துறையினர், ராணுவத்தினர் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் குழு அதிரடி நடவடிக்கை எடுத்து சுட்டு வீழ்த்திய இந்திய பாதுகாப்புப் படையினர், வெற்றிக் கோஷம் எழுப்பினர்.