காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது முதல், எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் செக்டார் அருகே உள்ள இந்திய நிலைகளைக் குறிவைத்து இன்று பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
சிறிய ரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு இந்திய ராணுவம் தரப்பில் இருந்து தக்க பதிலடி தரப்பட்டது. முன்னதாக நேற்றும் இதேபோல் இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.