

புது தில்லி: மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மோதிலால் வோரா (93) திங்களன்று மரணமடைந்தார்.
முன்னரே நுரையீரல் தொற்று நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சிறுநீரகத் தொற்றின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தில்லின் ஒக்லா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வோரா திங்கள் மதியம் மரணத்தைத் தழுவினார். அவரது இறுதிச்சடங்குகள் சொந்த மாநிலமான சத்தீஸ்கரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவிற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.