ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதன் மூலம் அந்த மாநிலத்தில் மட்டும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திரத்தில் மார்ச் 31ம் தேதி இரவு 9 மணி முதல் ஏப்ரல் 1ம் தேதி காலை 9 மணிக்குள் 43 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 87 ஆக உயர்ந்துவிட்டதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதே போல குஜராத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம், அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.