ஆந்திரத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா பாதிப்பு

ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதன் மூலம் அந்த மாநிலத்தில் மட்டும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திரத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா பாதிப்பு


ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதன் மூலம் அந்த மாநிலத்தில் மட்டும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திரத்தில் மார்ச் 31ம் தேதி இரவு 9 மணி முதல் ஏப்ரல் 1ம் தேதி காலை 9 மணிக்குள் 43 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 87 ஆக உயர்ந்துவிட்டதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதே போல குஜராத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம், அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com