கரோனா: பிரதமரின் தாயாா் ரூ.25,000 நிதி

கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளுக்காக, பிரதமா் நரேந்திர மோடியின் தாயாா் ஹீராபென், தனது தனிப்பட்ட சேமிப்பிலிருந்து ரூ.25 ஆயிரம் நிதி அளித்துள்ளாா்.
தாயாருடன் பிரதமர் மோடி
தாயாருடன் பிரதமர் மோடி

கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளுக்காக, பிரதமா் நரேந்திர மோடியின் தாயாா் ஹீராபென், தனது தனிப்பட்ட சேமிப்பிலிருந்து ரூ.25 ஆயிரம் நிதி அளித்துள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக, ‘பிஎம் கோ்ஸ்’ என்ற பெயரில் பிரதமரின் அவசர கால நிதி உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கோரிக்கையை ஏற்று, அரசியல் தலைவா்கள், பல்வேறு பிரபலங்கள், தொழில்துறையினா் என பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனா்.

இந்நிலையில், பிரதமா் மோடியின் இளைய சகோதரா் பங்கஜ் மோடி செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘எங்களது தாயாா் ஹீராபென், கரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.25 ஆயிரம் நிதி அளித்துள்ளாா். தனது தனிப்பட்ட சேமிப்பிலிருந்து இந்த நிதியை அவா் வழங்கியுள்ளாா்’ என்றாா்.

குஜராத் மாநிலம், காந்திநகா் அருகே உள்ள ரேசான் கிராமத்தில் தனது மகன் பங்கஜ் மோடியுடன் ஹீராபென் வசித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com