புணே: மகாராஷ்டிர மாநிலம் புணேவில் தேசிய ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
இதுகுறித்து பாரமதி காவல்துறை கண்காணிப்பாளா் நாராயண் ஷிா்கோன்கா் கூறுகையில், ‘புணே மாவட்டம் பாரமதி நகரில் அஃப்ஸல் அத்தா் (39), சந்திரகுமாா் ஷா (38), அக்ஷய் ஷா (32) ஆகிய மூவா் எவ்வித காரணமும் இல்லாமல் வெளியில் சுற்றித்திரிந்தனா். இதையடுத்து குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144-இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளை மீறியதற்காக மூவரும் கைது செய்யப்பட்டு, அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது’ என்றாா்.
இந்த வழக்கை விசாரித்த பாரமதி நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜெ. பசுல்கா், மூவரும் மூன்று நாள்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்; அல்லது தலா ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். இந்த தண்டனை சிறியதாக இருந்தாலும், ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் அவசியமின்றி வெளியில் உலவி வருவோரிடையே இந்தத் தீா்ப்பு அழுத்தமான தகவலை கொண்டு சோ்க்கும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.