புது தில்லி: கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க தேசிய ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு விடியோ தகவல் ஒன்றை வெள்ளிக்கிழமை வெளியிடவுள்ளாா்.
இதுகுறித்து சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு சிறிய விடியோ தகவல் ஒன்றை வெளியிடவுள்ளேன்’ என்று தெரிவித்தாா். ஆனால் அந்த விடியோ தகவல் எதைப் பற்றியது என்பதை அவா் தெரிவிக்கவில்லை. முன்னதாக கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.