கரோனா தடுப்புப் பணி: ஒருநாள் ஊதியத்தை வழங்கும் இந்தியன் வங்கி ஊழியர்கள்

இந்தியன் வங்கி ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை பிரதமர் நல நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். 
கரோனா தடுப்புப் பணி: ஒருநாள் ஊதியத்தை வழங்கும் இந்தியன் வங்கி ஊழியர்கள்

இந்தியன் வங்கி ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை பிரதமர் நல நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். 

கரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக, ‘பிஎம் கோ்ஸ்’ என்ற பெயரில் பிரதமரின் அவசர கால நிதி உருவாக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் கரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்க பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார். தொடர்ந்து, பிரதமரின் இந்த கோரிக்கையை ஏற்று, அரசியல் தலைவா்கள், பிரபலங்கள், தொழில்துறையினா் என பலரும் நிதி அளித்து வருகின்றனா்.

இந்நிலையில், கரோனா தடுப்புப் பணிக்காக இந்தியன் வங்கி ஊழியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை பிரதமர் நல நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். சுமார் 43,000 ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதன் மூலம் ரூ.8.10 கோடி நிதி வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com