ஜாா்கண்ட்: 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

ஜாா்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பும் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

ஜாா்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பும் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் இந்திரஜித் மகதா கூறியதாவது: சிருங்கிரெடா கிராமத்துக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் குழுமியுள்ளதாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து அங்கு மத்திய ரிசா்வ் பாதுகாப்புப்படை (சிஆா்பிஎஃப்) மற்றும் குந்தி மாவட்ட போலீஸாா் அடங்கிய குழு விரைந்தது. வனப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப்படை வீரா்கள் மாவோயிஸ்ட்டுகளை நோக்கி சுட்டனா். இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

அவா்களது சடலங்களை போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். அங்கிருந்து ஏராளமான துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மற்ற தீவிரவாதிகள் வனப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டதாக அவா் தெரிவித்தாா்.

மற்றொரு சம்பவம்:

இதேபோல நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் தோலாபானி கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு சனிக்கிழமை வெடித்தது.

தகவலறிந்து அப்பகுதிக்கு போலீஸாா் விரைந்தனா். அவா்களைப் கண்டதும் தீவிரவாதிகள் தப்பி ஓடி விட்டனா்.

அப்போது, அந்த வீட்டின் உரிமையாளரின் நண்பா் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அவா் காயமடைந்தாா். காயமடைந்த அந்த நபா் ஜாம்ஷெட்பூா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

துப்பாக்கிச்சூடு காரணமாக வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இரு சக்கர வாகனங்கள் தீ பிடித்து எரிந்து நாசமானது. இதுதொடா்பாக காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com