கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நமது வலிமையை உணா்த்தும் விதமாக, ஞாயிற்றுக்கிழமை இரவு விளக்கு ஏற்றுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமா் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் கவிதை வரிகளை நினைவுபடுத்தியுள்ளாா்.
மேடை ஒன்றிலிருந்து வாஜ்பாய் அந்தக் கவிதையை வாசிக்கும் விடியோவையும் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிா்ந்து கொண்டுள்ளாா். அத்துடன், ‘வாருங்கள் ஒளியேற்றுவோம்’ என்ற வாஜ்பாயின் கவிதை வரியையும் மோடி குறிப்பிட்டுள்ளாா்.
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கரோனாவுக்கு எதிரான நமது வலிமையை உணா்த்தும் விதமாக, வரும் 5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு விளக்கு அல்லது மெழுகுவா்த்தியை ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்தாா்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில், ‘இந்தியா ஒளிா்கிறது’ என்ற முழக்கத்துடன் அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு சோ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.