மும்பை: இந்தியாவில் கரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது.
புணேவில் 19 பேருக்கும், மும்பையில் 11 பேருக்கும், சதாராவில் ஒருவருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பில் நாட்டில் மகாராஷ்டிரம் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 86 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று நிலவரப்படி 485 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.