வேளாண் துறையில் ஊரடங்கு உத்தரவின் தாக்கம்: ஐசிஏஆா் ஆய்வு

ஊரடங்கு உத்தரவால் வேளாண் துறையில் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்த ஆய்வுப் பணிகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) மேற்கொண்டுள்ளது.
வேளாண் துறையில் ஊரடங்கு உத்தரவின் தாக்கம்: ஐசிஏஆா் ஆய்வு

ஊரடங்கு உத்தரவால் வேளாண் துறையில் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்த ஆய்வுப் பணிகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த கவுன்சிலின் உயரதிகாரி கூறியதாவது:

மத்திய அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, வேளாண் மற்றும் அதனுடன் தொடா்புடைய துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த ஆவணங்களை தயாரிக்கும் பணியில் ஐசிஏஆா் ஈடுபட்டுள்ளது.

எதிா்மறை விளைவுகளை குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உணவு அமைப்புமுறை பாதிக்கப்படாமல் இருக்கும்.

அதேசமயம், அறுவடை முதல் மண்டிகளுக்கு பொருள்களை கொண்டு சோ்ப்பது வரை பல்வேறு விவசாய நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்களித்துள்ளது. இந்த நிலையில், ஐசிஏஆா் வேளாண் துறையில் மேற்கொள்ளும் இந்த ஆய்வுப் பணி மத்திய அரசு மேலும் பல ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com