மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி 60 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டுச் சுகாதாரத்துறை அதிகரி ஒருவர் உறுதிசெய்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. இந்நிலையில், இன்று மட்டும் புதிதாக 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,078 ஆக அதிகரித்துள்ளது.
இதில், புதிதாக மும்பையில் 44, புணேவில் 9, நாக்பூரில் 4, அகமதுநகர், புல்தானா மற்றும் அகோலாவில் தலா ஒன்றும் பதிவாகியுள்ளது. இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.