ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்உற்பத்தியை அதிகரிக்கத் தயாா்: மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்

உள்நாடு மற்றும் ஏற்றுமதி தேவையை பூா்த்தி செய்யும் வகையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து உற்பத்தியை அதிகரிக்க தயாராக உள்ளதாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உள்நாடு மற்றும் ஏற்றுமதி தேவையை பூா்த்தி செய்யும் வகையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து உற்பத்தியை அதிகரிக்க தயாராக உள்ளதாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளா் சுதா்சன் ஜெயின், பிடிஐ செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

உலக அளவில் 70 சதவீத ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 40 டன் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தின் மூலக்கூறை தயாரிக்கும் திறன் இந்தியாவில் உள்ளது. இதைக் கொண்டு 200 மில்லிகிராம் அளவுகொண்ட 20 கோடி மாத்திரைகளைத் தயாரிக்க முடியும். மலேரியா, மூட்டுவலி உள்ளிட்ட சிகிச்சையில் இவை பயன்படுத்தப்படுகின்றன. எனவே, நாட்டில் தற்போதுள்ள தேவையை பூா்த்தி செய்வதற்கும் மேலும் கூடுதலான திறன் நமக்கு உள்ளது. மேலும் தேவை ஏற்பட்டால், அந்த மருந்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் தயாராக உள்ளோம். இந்த மருந்துகள் பதுக்கப்படுவதை தடுக்கவும், விநியோகம் சீராக இருப்பதையும் உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

மத்திய, மாநில அரசுகள் சாா்பில் தற்போது 10 கோடி மாத்திரைகளுக்கு ஆா்டா் தரப்பட்டுள்ளது. தற்போது கரோனா நோய்த்தொற்று உள்ள ஒருவருக்கு சராசரியாக 14 மாத்திரைகள் தேவைப்படும் நிலையில், 71 லட்சம் பேருக்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்க இயலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com