தில்லியில் வீட்டைவிட்டு யார் வெளியே வந்தாலும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து 600-ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் மும்பை, உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து தில்லியிலும் வீட்டைவிட்டு வெளியே வரும்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்ததாவது:
முகக் கவசம் அணிவது கரோனா வைரஸ் பரவலை கணிசமாகக் குறைக்கும். எனவே, வீட்டைவிட்டு வெளியே வரும்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. துணியால் ஆன முகக் கவசமும் அணியலாம்.