வீட்டைவிட்டு வெளியே வந்தால் முகக் கவசம் கட்டாயம்: தில்லி முதல்வர்

​தில்லியில் வீட்டைவிட்டு யார் வெளியே வந்தாலும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தில்லியில் வீட்டைவிட்டு யார் வெளியே வந்தாலும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து 600-ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் மும்பை, உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து தில்லியிலும் வீட்டைவிட்டு வெளியே வரும்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்ததாவது:

முகக் கவசம் அணிவது கரோனா வைரஸ் பரவலை கணிசமாகக் குறைக்கும். எனவே, வீட்டைவிட்டு வெளியே வரும்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. துணியால் ஆன முகக் கவசமும் அணியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com