மருத்துவம் மற்றும் வாகன காப்பீடுகளை புதுப்பிக்க மே 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முதலில் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த ஊரடங்கை மே 3-ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மருத்துவம் மற்றும் வாகன மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காப்பீட்டுப் பாலிசிதாரர்கள் தங்களுடைய பாலிசியைப் புதுப்பிப்பதற்கான அவகாசத்தை மே 15ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி மார்ச் 25-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை காப்பீடுகளை புதுப்பிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு இந்தக் காலக்கெடு நீ்ட்டிக்கப்பட்டுள்ளது. பாலிசிதாரர்களின் சிரமத்தை போக்கும்நோக்கில், மத்திய அரசு இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.