நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏப்.20-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமானதைத் தொடர்ந்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏப்.20-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேமசயம் 20ஆம் தேதி முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.