ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் நாளுக்கு நாள் லட்சக்கணக்கான உயிர்களை இது பலிவாங்கி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 991 பேர் கரோனானாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தானில் 41 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்ததையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை அம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.