சேலத்தில் அம்மா உணவகங்களில் காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இதற்கான செலவை சேலம் மாவட்ட அதிமுக ஏற்கும் எனவும் கூறியுள்ளார்.
அதன்படி, நாளை முதல் சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 11 அம்மா உணவகங்கள், புற நகரில் உள்ள 4 அம்மா உணவகங்களில் காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
மேலும், சேலம் மாநகராட்சி, ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் அதேபோன்று அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.